chennai 2
செய்திகள்இந்தியா

கல்லூரிகளுக்கு விடுமுறையளித்த கனமழை

Share

இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழக மாநிலத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், தேனி மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுரை, இராமநாதபுரம், திருவாரூரில் பாடசாலைகளுக்கு மாத்திரம் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மதியமளவிலேயே, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...