Kerala Floods PTI 12801
செய்திகள்இந்தியா

கடும் மழையால் கேரளாவில் தொடர் பாதிப்பு!

Share

இந்தியா கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகக் கடற்பகுதியிலிருந்து கர்நாடகா கடற்பகுதி வரை, மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி நிலைகொண்டுள்ளது.

இதனையடுத்து வரும் 26ஆம் திகதி வரை அங்கு கனமழை பெய்யும் என, வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாளை மறுதினம் கேரளாவிலுள்ள பல பிரதேசங்களில் கடும் மழையுடனான வானிலை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1ஆம் திகதி முதல் இம்மாம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அம்மாநிலத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...