1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

Share

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை பியூமி ஹன்சமாலியிடம் விசாரணை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலி நேற்று (அக்டோபர் 21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

அவரது வாக்குமூலங்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த மேலும் பல மொடல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மேலும் பல மொடல்கள் மற்றும் நடிகைகளிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...