Madura
செய்திகள்அரசியல்இலங்கை

டியூ குணசேகர பலவீனமான அரசியல் கட்சித் தலைவர்! – பெரமுன சரமாரியாக சொற்கணை

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவரின் அமைச்சரவையையும் கடுமையாக விமர்சித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகரமீது, சரமாரியாக சொற்கணை தொடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்பதே எனது கருத்து. சுதந்திரத்துக்கு பிறகு உருவான முட்டாள் தனமான அமைச்சரவையே இது. மடத்தனமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” – என்று டியூ குணசேகர அரசுமீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கருத்து வெளியிட்டுள்ளார்.

” டியூ குணசேகர என்பவர் பலவீனமான அரசியல் கட்சித் தலைவர். கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தவர். கோப் குழுவின் தலைவராக இருந்து எதனையும் செய்யவில்லை. அவர் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...