articles2Fa5gVbadaZHsNNRaO5GvG 1
செய்திகள்அரசியல்இலங்கை

தரம் 06 கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைப்பு: ஆசிரியர் சங்கங்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி அறிவிப்பு!

Share

ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையின் கீழ், 06 ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) பிற்பகல் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் முக்கிய ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தரம் 01-க்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகள் எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

கற்றல் தொகுதிகளைத் (Learning Modules) தயாரிப்பதில் நிலவும் சவால்கள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டே தரம் 06-க்கான சீர்திருத்தங்கள் 2027 வரை பிற்போடப்பட்டுள்ளன.

கல்வி மறுசீரமைப்பு ஒன்றின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், புதிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது கல்வி மறுசீரமைப்பு மட்டுமன்றி, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினைகள், மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்ற நடைமுறைகள், காலதாமதமாகி வரும் ஆசிரியர் மற்றும் அதிபர் தரமுயர்த்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது

 

 

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...