Education 2
செய்திகள்இலங்கை

தரம் 6 – 9 கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பம்

Share

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகள் தற்போது பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும், வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்ட கற்றல் செயற்பாடுகளை இவ் வருட முடிவுக்குள் முழுமையாக நிறைவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் ஆண்டுக்கான தவணை இறுதி பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாத இறுதி வரை பிற்போடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிர்வாகத்தால், கல்வி அமைச்சுக்கு இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் கலந்துரையாடி தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...