elac
செய்திகள்இலங்கை

மாகாண சபைத் தேர்தல் – உறுதியற்ற நிலைப்பாட்டில் அரசு!

Share

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இன்னும் இறுதியான – உறுதியான முடிவொன்றை எடுக்கவில்லை என்பது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் புலனாகின்றது.

2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் வெளியான கையோடு, இலங்கை அரசியல் களத்தில் தேர்தல் தொடர்பான கருத்தாடல்களும் வலுப்பெற்றன.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை பழைய முறைப்படியே (விகிதாசார) நடத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச , நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூட்டத்தில் இணக்கம் வெளியிட்டார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்த பிறகே, தேர்தல் தொடர்பில் அரசியல் களத்திலும், ஊடக பரப்பிலும் அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

ஆனால் 2022 மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என மேலும் சில அமைச்சர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் தேர்தல் முறைமை மாற்றப்படும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் வழங்கியுள்ளார். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்றாலும், எந்தக் காலப்பகுதியில் அது நடைபெறும் என்பது தொடர்பில் உறுதியான பதில் அரச தரப்பிடம் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...