New Project 1 606896 552280
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 3 நாட்கள் தடுத்து வைக்க CID-யினருக்கு அனுமதி!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரணை செய்யக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், அவர் நேற்று (26) கைது செய்யப்பட்டார்.

இன்று (27) சந்தேகநபர் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறிய அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியத்தைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெளிவுபடுத்தினர்.

புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரை எதிர்வரும் 3 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்கப் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.

குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது அல்லது யாருக்காவது வழங்கப்பட்டதா என்பது தொடர்பான கோணங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...