gl7
செய்திகள்அரசியல்இலங்கை

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடாது!

Share

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் வெளிநாடுகளுக்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளில் வெளிநாடுகள் பங்களிப்பு செலுத்தும் என எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர்களின் வடக்கு பயணம் குறித்துதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களை எதிர்பார்த்த நிலையில் சீனா இது தொடர்பில் இதுவரை அக்கறை செலுத்தவில்லை என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர், சீனா மட்டுமல்ல எந்தவொரு வெளிநாடுகளுக்கும் இறையாண்மையுள்ள நாடுகளின் உள்விவகார விடயங்களில் தலையிட அதிகாரமில்லை என தெரிவித்தார்.

அத்தோடு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வை வழங்கத் தயாராகவுள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் அதனை புறக்கணிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...