imf
செய்திகள்அரசியல்இலங்கை

நிதி நெருக்கடி! – மதில் மேல் பூனை’யாக அரசு

Share

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் விவகாரத்தில் இலங்கை அரசு ‘மதில் மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த வழியென அரசிலுள்ள ஒருசிலரும், அவ்வாறானதொரு தேர்வுக்கு அரசு சென்றுவிடக்கூடாது என மற்றுமொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்ற முற்பட்டால் அது உள்நாட்டில் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்து, ஸ்தீரமற்ற தன்மையை உருவாக்கும் என்பதே, ‘வேண்டாம்’ என வலியுறுத்தும் தரப்பின் கருத்தாக உள்ளது.

ஆனால் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள்கூட இலங்கைக்கு பாரிய தொகை கடன்களை வழங்குவதற்கு தயக்கம்காட்டும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே ஒரே வழியெனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நெருக்கடி நிலை உருவாகும் எனவும் ‘வேண்டும்’ என வலியுறுத்தும் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஐஎம்எப் விவகாரம் பற்றி ஆராயப்பட்டது. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...