child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4
செய்திகள்இலங்கை

ஆபாசப்படம் காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் – இளைஞனுக்கு மறியல் !

Share

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 வயதான சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை காட்டி 21 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் .

குறித்த இளைஞன் நேற்று (29) வவுணதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்று அங்கு பணியாற்றிவரும் நிலையில் குறித்த சிறுமி தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று சிறுமி தனிமையில் இருந்த வேளையில் அங்கு சென்ற இளைஞன் தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தினைக்காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தெரிவித்ததனைத்தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் இன்று (30) கைது செய்யப்பட்ட இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...