625.500.560.350.160.300.053.800.900.160.90 24
செய்திகள்இலங்கை

அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்தோரே வெளியேற்றம்! – ஜோன்ஸ்டன்

Share

அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்ததாலேயே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் -என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்வதற்கே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் முற்பட்டனர். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தினர். அவர்களிடம் திட்டமிடல் இருக்கவில்லை. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்திலேயே செயற்பட்டனர். அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகளை வழங்கியும், அவர்கள் அரசுக்கு எதிராகவே செயற்பட்டனர்.

எனவேதான் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். அன்று மங்கள செய்ததைபோன்றே இவர்கள் தற்போது செய்ய முற்பட்டனர். அன்று மங்களவை மஹிந்த வெளியேற்றினார். இன்று ஜனாதிபதி கோட்டாபய இவர்களை வெளியேற்றினார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...