Norway
செய்திகள்உலகம்

நோர்வேயில் மர்ம நபரால் பரபரப்பு

Share

நோர்வே – காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நோர்வேயில் காங்ஸ்பெர்க் நகரில் அம்பு மற்றும் வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்திற்கு வந்த குறித்த சந்தேக நபர், வில், அம்பு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்தி மக்களைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...