litrp
செய்திகள்இலங்கை

மூன்று நாட்களுக்கு போதுமான எரிவாயு கையிருப்பில்!

Share

துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களுக்கான டொலரை மத்தியவங்கி விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த எரிவாயு இன்று காலை முதல் இறக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் பின்னர் சிலிண்டர்களில் நிரப்பும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த எரிவாயு மூன்று நாட்களுக்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு வார காலமாக எரிவாயுவுடன் குறித்த கப்பல் நங்கூரமிட்டிருந்த நிலையில், நேற்றையதினம் இதற்கான டொலர் மத்தியவங்கியால் செலுத்தப்பட்டது.

இதேவேளை, எரிவாயு நிரப்பிய இன்னும் இரண்டு கப்பல்கள் ஆழ்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான டொலர் இந்த வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...