litrp
செய்திகள்இலங்கை

மூன்று நாட்களுக்கு போதுமான எரிவாயு கையிருப்பில்!

Share

துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களுக்கான டொலரை மத்தியவங்கி விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த எரிவாயு இன்று காலை முதல் இறக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் பின்னர் சிலிண்டர்களில் நிரப்பும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த எரிவாயு மூன்று நாட்களுக்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு வார காலமாக எரிவாயுவுடன் குறித்த கப்பல் நங்கூரமிட்டிருந்த நிலையில், நேற்றையதினம் இதற்கான டொலர் மத்தியவங்கியால் செலுத்தப்பட்டது.

இதேவேளை, எரிவாயு நிரப்பிய இன்னும் இரண்டு கப்பல்கள் ஆழ்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான டொலர் இந்த வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...