dilan
செய்திகள்இலங்கை

அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! – டிலான் பெரேரா

Share

அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! – டிலான் பெரேரா

நாட்டில் அவரசர கால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகவே பல பதுக்கல் குடோன்களை கைப்பற்ற முடிந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் தெரிக்கையில்,

மக்களை அடக்குமுறை செய்வதற்காக இந்த சட்டம் அல்ல. எதிர்க்கட்சியினர் கறுப்புச் சந்தையிலுள்ள முதலாளிகளுக்கு விசுவாசமாகவே நடக்கின்றனர். ஆனால் மக்கள் பக்கமாக அரசாங்கம் உள்ளது.

அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டால் நிச்சயமாக சீனி விலை இன்று 270 ரூபாவாக விற்கப்படும் அபாயம் ஏற்படும்.

ஆசிரியர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி போராட்டம் செய்தபோதும் பொலிஸாரை ஈடுபடுத்தி அதனை கட்டுப்படுத்தவில்லை.

ஆனால் ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டபோது அந் நாட்டுப் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜனநாயகம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மறந்துவிட்டார். ஜனநாயகம் அழிக்கப்பட்டதை அவர் தனது வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...