dilan
செய்திகள்இலங்கை

அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! – டிலான் பெரேரா

Share

அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! – டிலான் பெரேரா

நாட்டில் அவரசர கால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகவே பல பதுக்கல் குடோன்களை கைப்பற்ற முடிந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் தெரிக்கையில்,

மக்களை அடக்குமுறை செய்வதற்காக இந்த சட்டம் அல்ல. எதிர்க்கட்சியினர் கறுப்புச் சந்தையிலுள்ள முதலாளிகளுக்கு விசுவாசமாகவே நடக்கின்றனர். ஆனால் மக்கள் பக்கமாக அரசாங்கம் உள்ளது.

அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டால் நிச்சயமாக சீனி விலை இன்று 270 ரூபாவாக விற்கப்படும் அபாயம் ஏற்படும்.

ஆசிரியர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி போராட்டம் செய்தபோதும் பொலிஸாரை ஈடுபடுத்தி அதனை கட்டுப்படுத்தவில்லை.

ஆனால் ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டபோது அந் நாட்டுப் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜனநாயகம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மறந்துவிட்டார். ஜனநாயகம் அழிக்கப்பட்டதை அவர் தனது வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...