samayam tamil
செய்திகள்இந்தியாசினிமாபொழுதுபோக்கு

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கானின் மகனுக்கு 14 நாட்கள் மறியல்!

Share

நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் இருந்து, கோவா சென்ற சொகுசு கப்பலில் விருந்தொன்று நடைபெற்றிருந்தது.

குறித்த விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்துவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த கப்பலுக்குச் சாதாரண பயணிகளைப் போல சென்ற போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அங்கு கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியமை தெரியவந்தது.

இதனையடுத்து, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளடங்கலாக, எட்டுப் பேரைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், 3 நாட்களின் பின்னர் அவர்களை மும்பை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில், குறித்த எட்டுப் பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...

11 20
செய்திகள்உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறைகூவல்!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்...