இரகசியமாக அணு ஆயுதப் பரிசோதனை செய்கின்றன: அமெரிக்காவும் பரிசோதிப்பதில் தவறில்லை – டொனால்ட் ட்ரம்ப்!

w 1280h 720format jpgimgid 01k941vebwvgjntwjfmrjvf3ysimgname trump 1762146498940

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார்.

இரகசிய அணு ஆயுதப் பரிசோதனைகள் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தச் சூழலில் அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுதப் பரவல் குறித்து உலகளாவிய பதற்றம் நிலவும் சூழலில், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

Exit mobile version