20220202 202429 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை அரசின் செயலுக்கு துணை போக வேண்டாம்! – இந்திய துணை தூதரகத்தின் வதிவிடப் பிரதிநிதியிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

Share

இலங்கைத் தமிழர்களையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் பிரிக்க முயலும் இலங்கை அரசின் செயலுக்கு துணை போக வேண்டாம் என இந்தியாவின் துணை தூதரகத்தின் வதிவிடப் பிரதிநிதி ராம் மகேஷிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் குறித்த போராட்டத்திற்கு நேற்றைய தினம் இரவு(2) வருகைதந்து ஆதரவளித்திருந்தார்.

அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக செல்வதற்கு முன்பு இந்திய துணைத் தூதரகத்திற்குச் சென்று வதிவிடப் பிரதிநிதியிடம் மீனவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் மீனவர்களுக்கு அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் தெரிவித்த விடயங்களையும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய துணைத் தூதரகத்தின் வதிவிடப்பிரதிநிதியுடன் நீங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது தொடர்பிலும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இரு மீனவர்கள் தொடர்பிலும் ஏற்கனவே மாதகலில் ஒருவர் மரணமடைந்த விடயம் தொடர்பிலும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இது ஒரு பயங்கரமான செய்தி. குறிப்பாக ஈழத்தமிழர்கள் இந்தியாவை நோக்கி ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு கோரி நிற்கும் இந்தக் காலத்தில் ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டு தமிழர்களையும் மோதவிட்டு பிரிக்கும் செயலை இலங்கை அரசும் இலங்கை கடற்படையும் கச்சிதமாகவும் மிகவும் துல்லியமாகவும் செயற்படுவதாக நான் அவர்களிடம் தெரிவித்து இருக்கின்றேன் .

அவர் இவ் விடயத்தினை இந்தியத்தூதரகம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிப்பதாகவும் தான் அறிந்தவரை கடல் எல்லையைத் தாண்டாதவாறு மீன்பிடியில் ஈடுபடுமாறு இந்திய மீனவர்களை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மீனவர்கள் அதை பின்பற்றுவார்களோ என்று தெரியாது என்றும் தெரிவித்தார் . ஆனால் சிறந்த பொறிமுறை ஒன்றை அமைத்தே அவற்றைத் தடுக்க வேன்டும் என்றும் தெரிவித்தார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தெரிவித்திருந்தார். இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான தூய வழியிலான ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்ட அவருடன் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத் தளபதிகளினாலேயே ஒழுக்கமான தலைவர் என்று கூறிய எமது மாபெரும் தலைவனையே கொச்சைப்படுத்தியவரே அவர் – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...