palani
செய்திகள்இந்தியாஇலங்கை

இந்தியாவை பகைக்காதீர்! – அவசரத்துக்கு உதவும் நாடு அதுவே என்கிறார் திகாம்பரம்

Share

அவசரத்திற்கு நமக்கு உதவி புரியும் இந்தியாவை ஒருநாளும் பகைத்துக் கொள்ளக்கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய திகாம்பரம் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையில் கேஸ், பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் அதேவேளை பொருளாதார நெருக்கடியும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பழனி திகாம்பரம் நாடு இந்தளவு பாரிய சிக்கலில் இருக்கும் போது இந்தியா 900 மில்லியன் கடனுதவி வழங்கி கை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கும்போது சில தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் சீனாவுடன் அவ்வாறு அபிவிருத்திகளை செய்ய முனையும்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில்லை எனவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...