indian scaled
செய்திகள்உலகம்

பாகிஸ்தானுக்குள் அத்துமீறியதா இந்திய நீர்மூழ்கிக் கப்பல்?

Share

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தை மேற்கோள்காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம், ‘கடந்த 16ஆம் திகதி, பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது.

அதனை பாகிஸ்தான் கடற்படை கண்டறிந்து தடுத்து நிறுத்தியது. இவ்வாறான சம்பவம் இது மூன்றாவது முறை.

ஏற்கனவே 2016ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2019ஆம் ஆண்டு மார்ச்சிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்த காணொலியும் பாகிஸ்தான் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இந்திய இராணுவம் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...