indian scaled
செய்திகள்உலகம்

பாகிஸ்தானுக்குள் அத்துமீறியதா இந்திய நீர்மூழ்கிக் கப்பல்?

Share

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தை மேற்கோள்காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம், ‘கடந்த 16ஆம் திகதி, பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது.

அதனை பாகிஸ்தான் கடற்படை கண்டறிந்து தடுத்து நிறுத்தியது. இவ்வாறான சம்பவம் இது மூன்றாவது முறை.

ஏற்கனவே 2016ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2019ஆம் ஆண்டு மார்ச்சிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்த காணொலியும் பாகிஸ்தான் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இந்திய இராணுவம் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...