daya
செய்திகள்இலங்கை

மஹிந்தவின் மகனுக்கு எதிராக தயாசிறி ‘அரசியல் போர்’

Share

“மாகாணசபைத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச எனக்கு சவால் கிடையாது. வடமேல் மாகாண மக்கள் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அதிரடியாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் 2022 முற்பகுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் உட்பட தேர்தலுக்கே உரிய சில அறிவிப்புகள் தெற்கு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

வடமேல் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் அறிவித்திருந்தார்.

சுதந்திரக்கட்சி கூட்டணியொன்றை அமைத்து, அழைப்பு விடுத்தால் அதனை ஏற்று களமிறங்க தயார் என்பதே தயாசிறியின் கருத்து.

இதற்கிடையில் மொட்டுக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ச வடமேல் மாகாணத்தில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடக்கூடும் என சிங்கள ஊடங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை இலக்காகக்கொண்டே குருநாகல் மாவட்டத்தில் அவர் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரோஹித்த ராஜபக்ச, உங்களுக்கு சவாலா என தயாசிறியிடம் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே,

” சவால் அல்ல. நான் வடமேல் மாகாணத்தில் பிறந்தவன். மக்கள் என்னைத்தான் ஆதரிப்பார்கள்.” – என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...