சேதனப் பசளையில் பயிர்ச்செய்கை 4 scaled
செய்திகள்இலங்கை

இரணைமடுக் குளத்தின் கீழ் சேதனப்பசளையில் பயிர்ச்செய்கை

Share

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான காலபோக செய்கை சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரப்பரளவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை புதிதாக 500 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்ச் செய்கைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனப்பசளையை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

காலபோக பயிர்ச்செய்கை ஆரம்ப திகதியாக எதிர்வரும் 06 ஆம் திகதியாகவும் இறுதி அறுவடைத் திகதி 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதியாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசால் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்துக்கு 90.2 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...