covidd
செய்திகள்இலங்கை

கொவிட் – மருந்து இறக்குமதிக்கு அனுமதி

Share

கொவிட் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மருந்தானது கொவிட் நோயாளர்களின் உயிர் ஆபத்தை 81 வீதம் குறைக்கிறது என சோதனைகள் காட்டுகின்றன. அத்துடன் நாள்பட்ட நோயாளர்களுக்கு இந்த மருந்து பொருத்தமானது எனவும் கூறப்படுகிறது.

அதன்படி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்திய போன்ற பல நாடுகள் இந்த மருந்தை வழங்க ஒப்புதல் அளித்தள்ளன.

இலங்கைக்கு இந்த மருந்தை கொண்டு வர தனியார் நிறுவனம் ஒப்புதல் அளித்தபோதிலும் சில தடை காரணமாக மருந்தை இறக்குமதிய செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட போது இந்த மருந்தை பயன்படுத்தினார் எனவும் இந்த மருந்தை பற்றி பேசிய முதல் நபரும் அவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...