884255 corona deaths
செய்திகள்இலங்கை

கொவிட் நோயாளர்கள் தப்பியோட்டம் – 32 பேருக்கு தொற்று உறுதி!

Share

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மூவரும் மருத்துவமனையில் தங்கிச்செல்லாமல் தப்பிச்சென்றிருந்தனர்.

இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதாரப் பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு பேரை தனிமைப்படுத்தியிருந்தனர் எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதனை பின்பற்றாது வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமத்தை சேர்ந்த 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...