sl
செய்திகள்இலங்கை

பஞ்சத்தை நோக்கி நாடு! – கொழும்பு பல்கலை பேராசிரியர் எச்சரிக்கை

Share

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பாரிய உணவு பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து செல்கிறது. இதனால் நட்டு மக்கள் பரவலாக உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும்.

இதன் காரணமாக வறுமை, போசாக்கின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள், பெருந்தோட்டத் துறையினர் உள்ளிட்டோர் பெரும் நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும்.

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தவண்ணம் செல்கின்றன. இந்த உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை குறைந்த உணவை உட்கொள்ள வழிவகுக்கும்.

ஒவ்வரு இல்லாது உணவை சரியாக உட்கொண்டாலும் உணவு அல்லாத விடயங்களான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட்ட பிற விடயங்களுக்கான செலவுகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இவற்றின் காரணமாக நாடு மிக மோசமான சூழ்நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது. – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...