R
செய்திகள்இலங்கை

சிவப்பு வலயத்தில் நாடு! – விசேட வைத்திய நிபுணர்

Share

நாடு கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் வ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நாட்டு நிலைமையில் கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் நாளொன்றில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே இலங்கை சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட இன்னும் ஒரு வாரம் வரை செல்லும். அத்துடன் இவ் எச்சரிக்கையில் இருந்து மீண்டு, பச்சை வலயமாக பிரகடனப்படுத்தப்பட நாளொன்றுக்கு இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 950 வரை குறைய வேண்டும்.

கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போது அவ் எண்ணிக்கை குறைவடைந்து வருவதைக் காணமுடிகின்றது என்று தெரிவித்துளளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...