R
செய்திகள்இலங்கை

சிவப்பு வலயத்தில் நாடு! – விசேட வைத்திய நிபுணர்

Share

நாடு கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் வ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நாட்டு நிலைமையில் கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் நாளொன்றில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே இலங்கை சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட இன்னும் ஒரு வாரம் வரை செல்லும். அத்துடன் இவ் எச்சரிக்கையில் இருந்து மீண்டு, பச்சை வலயமாக பிரகடனப்படுத்தப்பட நாளொன்றுக்கு இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 950 வரை குறைய வேண்டும்.

கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போது அவ் எண்ணிக்கை குறைவடைந்து வருவதைக் காணமுடிகின்றது என்று தெரிவித்துளளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...