gmoa
செய்திகள்இலங்கை

மீண்டும் தலைதூக்கும் கொரோனாத் தொற்று! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Share

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் பாரதூரமான நிலைமை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைரஸின் பாரதூரத்தன்மையை மக்கள் மறந்துவிட்டனர். அது தொடர்பில் அவர்களை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியாபோன்ற நாடுகளில் வைரஸ் பரவல் தலைதூக்கியுள்ளது. இதனால் மாநிலங்கள் முடக்கப்பட்டுவருகின்றன. எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டை முடக்கினால் ஏற்படும் பாதிப்புகளை இலகுவில் கணித்துவிடமுடியாது.

அதேவேளை, எதிர்காலத்தில் கொரோனா மரண வீதமும் அதிகரிக்கும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...