Natarajan 700x375 1
செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா!

Share

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த 20 ஆம் திகதி டுபாயில் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று (22) டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் போட்டி நடைபெற இருந்தது. இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது .

இதனால் இவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், இவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட அணி நிர்வாகிகள் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...