உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவர, கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்த நிலையில் சாவடைந்தோரின் எண்ணிக்கை 49.52 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தோற்றுவிக்கப்படட கொரோனா வைரஸ் உலக நாடுகளை தன் வசமாக்கி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் இன்றுவரை அதிகரித்துக்கொண்டே செல்கிறது .
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியைக் தண்டியுள்ளது.
கொரோனாவிலிருந்து இதுவரை 22.08 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 49.52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாவடைந்துள்ளனர்.
தொற்றுக்கு உள்ளாகியவர்களில் 1.79 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 76 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment