Corona 13 20200702 1 570 850
செய்திகள்இலங்கை

கொரோனாத் தொற்று – 89 சிறார்கள் உயிரிழப்பு!

Share

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இதுவரையில் 89 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிறுவர்களை பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றொரும், பாதுகாவலர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பல நல சுகாதாரப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலிடி சில்வா கூறியவை வருமாறு,

” இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்த நாளிலிருந்து இற்றைவரை 10 ஆயிரத்து 500 கர்ப்பிணி தாய்மாருக்கு வைரஸ் தொற்றியுள்ளனர். இவர்களில் 60 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர்.

95 வீதமான தாய்மார் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

சிறார்கள் மத்தியில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருகின்றது. 18 வயதுக்கு குறைவான 89 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பெற்றோர், உறவினர், பாதுகாவலர்கள் மற்றும் அயலவர்கள் ஊடாகவே அவர்களுக்கு வைரஸ் தொற்றுகின்றது. எனவே, சிறார்களை பாதுகாக்க பொறுப்புடன் செயற்படுவோம்.”- என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...