Gas 1
செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!

Share

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை விரைவில் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உச்சம் தொட்டுள்ளது.

இதனால் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன எனவும், இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அறியமுடிகின்றது.

சமையல் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால், விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு, அரசிடம், நிறுவனங்கள் அனுமதி கோர வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

” தாங்கிக்கொள்ள முடியாத அளவு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதில் அரசு தலையிடும்” – என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...