e5388088 earth quake
செய்திகள்உலகம்

சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி!

Share

சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி!

சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் ஆக பதிவாகி இருந்ததுடன்  10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந் நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்து உள்ளனர். 35 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடுதுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது.

2008 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 87 ஆயிரம் பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...