stalin455r 1552898171
செய்திகள்இந்தியா

ஏரிகளை ஆய்வு செய்யும் தமிழக முதல்வர்

Share

இந்தியா சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை ஆய்வு செய்யவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை குறித்த ஏரிப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின், இது குறித்து கள ஆய்வு செய்யவுள்ளார்.

பருவமழைக்காலங்களில் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் நிரம்பும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாக, அங்கு பாரியளவில் பாதிப்புக்கள் பதிவாகின.

இந்நிலையிலேயே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அங்கு விஜயம் செய்கிறார்.

இதன்போது புழல் ஏரியின் நிலை தொடர்பிலும் அவர் ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...