25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற நபருக்கு தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தில் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாய் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இஷார செவ்வந்தி பிடிபட்டபோது சிலோன் பாய் நேபாளத்தில் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜே.கே.பாயை போலவே, சிலோன் பாயும் துபாயில் இருந்து மனித கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகளில் மனித கடத்தல்காரர்களுடன் இந்த சந்தேகநபர்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தங்குமிடம் வழங்கவும், வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல தேவையான வசதிகளை வழங்கவும் குறித்த கடத்தல்காரர்கள் ரூ. 2 மில்லியன் முதல் அதற்கு மேல் பணம் வசூலிப்பதாகவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிலோன் பாய் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...