images 1 4
செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை கிளைத் தெரிவு: சோமசுந்தரம் சுகிர்தன் தலைவராகப் பொறுப்பேற்பு!

Share

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளைத் தெரிவு மாவிட்டபுரத்தில் நேற்று (அக்21) நடைபெற்றது.

நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய நிர்வாகத் தெரிவின்படி, காங்கேசன்துறை தொகுதிக் கிளையின் முக்கியப் பொறுப்பாளர்கள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்:

தலைவர்: வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்
உப தலைவர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா
செயலாளர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ்
உப செயலாளர்: முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மரியதாஸ்
பொருளாளர்: வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கர்

மேலும், 21 வட்டாரங்களைக் கொண்ட வலி வடக்கில், நிர்வாக முக்கியப் பொறுப்புகளில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வட்டாரங்களைத் தவிர்த்து, ஏனைய வட்டாரங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இது குறித்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினை முதலான நடைமுறை ரீதியான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மக்களுக்குச் சிறந்த பணியாற்றுவதே இந்தப் புதிய நிர்வாகத் தெரிவின் குறிக்கோள் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...