Kandy
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காபன் பசளை கையிருப்பில்: கூறுகிறார் கண்டி மாவட்ட செயலாளர்

Share

கண்டி மாவட்டத்தில் அடுத்த பெரும்போக நெல் உற்பத்திக்குத் தேவையான காபன் பசளையின் அளவை விட மேலதிகமான அளவு காபன் பசளை கையிருப்பில் உள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார்.

ஹஸலக்க கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். ஹஸலக்க பிரதேசத்திலுள்ள 64 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று அங்கு இடம் பெற்றது. அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கண்டி மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கு கொம்போஸ்ட் பசளை மெற்றிக் தொன் 10,676 தேவைப்படுகிறது.

ஆனால் இவை கண்டி மாவட்டத்தில் தயார் படுத்தப்பட்ட 23 332 மெற்றிக் தொன் கொம்போஸ்ட் பசளை கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கான மிகப் பெரிய நீர்பாசனத் திட்டமான மினிப்பே திட்டத்தில் ஹெக்டேயர் 7500 ற்கும் மேற்பட்ட அளவு வயற் காணிகள் இருப்பதாகவும் அவற்றில் 15 000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளது கொம்போஸ்ட் உற்பத்திக்கு மேலதிகமாக குண்டசாலை, அக்குறணை, போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களும் பொம்போஸ்ட் பசளை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 45 கமனல சேவைகள் மத்திய நிலையங்கள் ஊடாக 4500 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அளவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக எமது தேவைக்கும் அதிகமான உற்பத்தி இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...