6241
செய்திகள்உலகம்

கனடா பிரதமர் சீனாவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

Share

5ஜி நெட்வேர்க் சேவையை வழங்கி வரும் ‘ஹூவாய்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி நெட்வேர்க்கே பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் சில நாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்று 5ஜி வயர்லெஸ் நெட்வேர்க்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

5ஜி நெட்வேர்க் சேவையை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாக பெரும்பாலான நாடுகள் இச் சேவைக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கின்றன.

ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்காவும் இது குறித்து குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் சில வாரங்களில் முடிவு செய்யப்படும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் 5ஜி நெட்வேர்க் சேவையை சோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவையை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...