6241
செய்திகள்உலகம்

கனடா பிரதமர் சீனாவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

Share

5ஜி நெட்வேர்க் சேவையை வழங்கி வரும் ‘ஹூவாய்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி நெட்வேர்க்கே பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் சில நாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்று 5ஜி வயர்லெஸ் நெட்வேர்க்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

5ஜி நெட்வேர்க் சேவையை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாக பெரும்பாலான நாடுகள் இச் சேவைக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கின்றன.

ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்காவும் இது குறித்து குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் சில வாரங்களில் முடிவு செய்யப்படும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் 5ஜி நெட்வேர்க் சேவையை சோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவையை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலை – டயகம வீதியில் பேருந்தும் பாடசாலை வேனும் மோதி விபத்து: மாணவர்கள் காயமின்றித் தப்பினர்

தலவாக்கலை – டயகம பிரதான வீதியின் ஹோல்புறூக் நகருக்கு அருகாமையில் இன்று (மே 12) காலை...

world 80
செய்திகள்உலகம்

இளம்பெண்களின் அந்தரங்கத் தேடல்: ஆபாசப் படங்கள் குறித்த வெளிப்படையான பார்வைகள்

பெண்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்களா அல்லது இது ஆண்களுக்கு மட்டுமே உரியதா என்ற விவாதம் தற்போது...

world 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடக்கம்: யாழ்ப்பாணத்தில் நினைவு ஊர்தி பயணம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பேராதனை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தில் முதுதத்துவமாணி (M.Phil) பயின்று வந்த விரிவுரையாளர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட...