OIL RIG
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய பெற்றோலிய மற்றும் எரிவாயு நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கிய அமைச்சரவை!

Share

நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் (2007 எண்.7) தேசிய பெற்றோலிய மற்றும் எரிவாயு நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டில் கிடைக்கின்றன என்பது ஆராய்ச்சியின் படி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் நிறுவப்படவுள்ளது.

இதனூடாக, புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை உற்பத்தி செய்வது மற்றும் உள்ளூர் நுகர்வுக்கான வாய்ப்பை உருவாக்குதல். அத்துடன் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு மீதான தேசிய கொள்கை என்பதற்கு அமைய சேமிப்பு, குழாய்கள் அமைத்தல், போக்குவரத்து மற்றும் விநியோக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, உரிமை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கு பொருந்தக்கூடிய பொது-தனியார் கூட்டுறவின் கீழ் தேசிய இயற்கை எரிவாயு நிறுவனத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...