basil 1
செய்திகள்அரசியல்இலங்கை

அடுத்த வாரம் டில்லி பறக்கின்றார் பஸில்!

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியா பயணிக்கவுள்ளார் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள ஒரு மில்லியன் டொலர் ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.

இயலுமான அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில், நிதி அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டது.

இதனிடையே, கடன் மறுசீரமைப்பு மற்றும் டொலர் பற்றாக்குறையை முகாமைத்துவப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளது என ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...