WhatsApp Image 2022 03 03 at 9.57.20 PM
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரை பயன்படுத்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பகுதியில்

கஞ்சா மதுபோதையில் வந்த நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்திய நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் புகுந்து தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

தாக்குதலை தடுக்க முயன்ற பிரதேசசபை உறுப்பினரின் தந்தையையும் கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

அத்ததுடன் வீட்டின் கேற்றையும் வேலி தகரங்களையும் சேதமாக்கி வீட்டிலிருந்த பெண்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது .

சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 03 03 at 9.57.18 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...