1549431590 2811
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!!

Share

சாவகச்சேரி நகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தபால் நிலைய வீதியில் இச்சம்பவம் நேற்று (07) இடம் பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி தபால் நிலைய வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நகரசபை உறுப்பினர், தபால் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளை திருப்பிய வேளையில், அவருக்கு பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில், விபத்துக்குள்ளானது.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் நகரசபை உறுப்பினர் மீது நடு வீதியில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், இரண்டாயிரம் ரூபா பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார்.

இதில், வெள்ளாம்போக்கட்டி கொடிகாமத்தில் வசித்து வரும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினரான 72வயதுடைய க.வேலாயுதபிள்ளை என்பவரே தாக்குதலுக்கு உள்ளானார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...