wedukunari 720x375 1
செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்!

Share

வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்!

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப் பரப்பில் அதிகளவான இராணுவத்தினர் காணப்படுகின்றனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அங்கிருந்த விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்குள் செல்ல முடியாது என தொல்பொருள் திணைக்களம் தடை விதித்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு இடம்பெற்று வருகின்றது .

இந் நிலையில் ஆலயத்துள் உள்ள விக்கிரகங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அழிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பல விக்கிரகங்களும் சூலங்களும் காணாமல் போயுள்ளன எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆலயத்துக்கு பெளத்த தேரர்கள் அமரும் கதிரை உட்பட பல பொருள்கள் உழவு இயந்திரங்களில் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை பெளத்த மயமாக்குவதற்கான வேலைகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள பிரதேச மக்கள், இவ் விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...