MediaFile 10
இந்தியாசெய்திகள்

படைவீரர் கொடி நாள் இன்று அனுசரிப்பு: முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் மோடி நிதி அளிப்பு.

Share

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் திகதி படைவீரர் கொடி நாளாகக் (Armed Forces Flag Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்றைய தினமும் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.

 இந்நாளில், முப்படை வீரர்களின் வீரம், தியாகத்தைப் போற்றி, அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் படைவீரர் கொடி நாள் நிதி சேகரிக்கப்படுகிறது.

அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போரில் வீரமரணமடைந்த, காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நன்கொடை நிதி அளித்து வருகின்றனர்.

படைவீரர் கொடி நாளை ஒட்டி முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நிதி அளித்தார். மேலும், படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....