நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது
பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் வயோதிபர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் கோரப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இம் மாத ஆரம்பத்தில் கிடைக்கப்பெற்ற நிலையில், ஏனைய 4 மில்லியன் தடுப்பூசிகளில் முதலாவது தொகுதியாக நேற்றைய தினம் 608,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
அதன் இரண்டாவது தொகுதியாக இன்றைய தினமும் 608,000 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment