samsung galaxy s21
செய்திகள்தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்!

Share

ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் வெகுவிரைவில் அறிமுகமாவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் ஜனவரி 2022 ல் அறிமுகமாகும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விவரங்கள் சமீபத்தில் சாம்சங் சர்வெரில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த ஒன் யு.ஐ. 4 கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 வரையிலான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

சாம்சங் தனது பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மூன்று ஓ.எஸ். அப்டேட் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இதன் விலை 660 யூரோக்கள் மற்றும் 705 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கான முன்பதிவு குறித்து இதுவரை அந்நிறுவனத்தால் தகவல் ஒன்றும் வெளியிடப்படவில்லை.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...