WhatsApp Image 2021 08 27 at 23.03.47 1
செய்திகள்இலங்கை

கொரோனாவிலிருந்து மீண்ட அஜித் ரோகண குடும்பத்துடன் கொடுத்த போஸ்!!

Share

கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.  அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதை உணர்ந்து முதல் சந்தர்ப்பத்திலேயே உடனடியாக சிகிச்சை பெறுவது மிக அவசியம் எனவும் அதனை தான் செய்ததன் காரணமாகவே இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் எனது போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி, தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறேன் என சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் மிகவும் வருந்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்தில் விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஆகவே நோயை குறைத்து மதிப்பிடாமல் அறிகுறி தென்பட்ட உடனேயே சிகிச்சை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...