WhatsApp Image 2021 08 27 at 23.03.47 1
செய்திகள்இலங்கை

கொரோனாவிலிருந்து மீண்ட அஜித் ரோகண குடும்பத்துடன் கொடுத்த போஸ்!!

Share

கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.  அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதை உணர்ந்து முதல் சந்தர்ப்பத்திலேயே உடனடியாக சிகிச்சை பெறுவது மிக அவசியம் எனவும் அதனை தான் செய்ததன் காரணமாகவே இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் எனது போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி, தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறேன் என சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் மிகவும் வருந்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்தில் விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஆகவே நோயை குறைத்து மதிப்பிடாமல் அறிகுறி தென்பட்ட உடனேயே சிகிச்சை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...