கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் கன்டர் ரக வாகனம் வீதியைவிட்டு கீழ் இறங்கி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதி, இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment