mahinda
செய்திகள்இலங்கை

துரிதப்படுத்தப்படும் சொலொஸ்மஸ்தான புனித பூமி அபிவிருத்தி!

Share

பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியை விளக்குகளால் அலங்கரிப்பதன் அவசியம் தொடர்பாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் ஆண்டு மே மாதம் முதல் புனித பூமியின் மின்விளக்கு கட்டணங்கள் மத்திய கலாசார நிதியத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு புனித தலத்தின் வீதிகளை கார்பட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக புனித பூமிகளின் அபிவிருத்திக்காக எதிர்வரும் 5 ஆண்டுக்காக இந்தியா வழங்க உள்ள 15 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது புனித பூமியின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுத் தர வேணடும் என பிக்குமார்களால் பிரதமருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...