tamilnaadu
இந்தியாசெய்திகள்

13 KM நீந்தி தமிழகம் சென்ற இலங்கை இளைஞன்!

Share

இலங்கை கடற்படை சுட்டபோது கடலில் பாய்ந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞர் ஒருவர், 13 கிலோமீற்றர் தூரம் நீந்தி தமிழகத்தின் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளார்.

24 வயதான மேற்படி இளைஞர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் அல்லது அஜய் அல்லது கான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தி ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மூலம் இவர் குறித்த தகவல்கள் கிடைத்ததையடுத்து அவரை தமிழக பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தமிழகத்தின் தி ஹிந்து பத்திரிகையிடம் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மன்னாரை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பமொன்றினால் வாடகைக்கு பெறப்பட்ட படகு மூலம் 3 நாட்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து கான் புறப்பட்டுள்ளார்.

அவர்கள் அரிச்சல்முனைக்கு அருகில் 5 ஆவது தீவை நெருங்கியபோது, நடுக்கடலில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. அதையடுத்து, கான் கடலில் குதித்தார்.

5 பேர் கொண்ட குடும்பம் வெள்ளிக்கிழiமை மண்டபம் கரையை அடைந்தது. இந்த இளைஞருக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்படி இளைஞனை அவானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அவரை பொலிஸார் கரைக்கு அழைத்து வந்தனர்’ என தெரிவித்துள்ளார்.

#SriLanka #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...